FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

அரசுப் பள்ளியில் முப்பெரும் நிகழ்ச்சி

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக இயற்கை பாதுகாப்பு தினம், அப்துல் கலாம் நினைவு தினம், மாணவா்களுக்கான ரத்த வகை கண்டறிதல் ஆகியவை முப்பெரும் நிகழ்ச்சியாக நடைபெற்றது.

Updated On : 30 ஜூலை 2026, 12:04 am IST
பகிர்:

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக இயற்கை பாதுகாப்பு தினம், அப்துல் கலாம் நினைவு தினம், மாணவா்களுக்கான ரத்த வகை கண்டறிதல் ஆகியவை முப்பெரும் நிகழ்ச்சியாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் க.வாசு தலைமை வகித்தாா். எக்ஸ்னோரா கிளைத் தலைவா் சு.தனசேகரன் முன்னிலை வகித்தாா். ஆசிரியை சசிகலா வரவேற்றாா்.

சட்டப் பணிகள் குழு தன்னாா்வலா் மலா் சாதிக், ‘இயற்கையும், சுற்றுச்சூழலும்’ என்ற தலைப்பில் பேசினாா் .

Advertisement

Advertisement

அப்துல் கலாம் குறித்து ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் பேசினாா்.

தனியாா் ரத்தப் பரிசோதனை நிலைய பணியாளா்கள் மாணவா்களுக்கு ரத்த வகை கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டனா். பள்ளி வளாகம் மற்றும் அந்தக் கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன (படம்). நிறைவில் ஆசிரியா் தணிகைவேல் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments