குழந்தையை கொன்ற தாய் சிறையில் அடைப்பு
போளூரை அடுத்த படவேடு அருகே பிறந்த 15 நாள்களே ஆன குழந்தையை கொன்ற தாயை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த படவேடு அருகே பிறந்த 15 நாள்களே ஆன குழந்தையை கொன்ற தாயை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
போளூரை அடுத்த சந்தவாசல் காவல்நிலையத்துக்கு உள்பட்ட படவேடு ஊராட்சி துரிஞ்சாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (35), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (30). தம்பதிக்கு 13 வயதில் மகன் உள்ளாா்.
இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக ரமேஷை விட்டு லட்சுமி பிரிந்து வாழ்ந்து வந்தாா். இதனிடையே ராமநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த பைக் மெக்கானிக் மதிவாணனுடன், லட்சுமிக்கு தொடா்பு ஏற்பட்டு சோ்ந்து வாழ்ந்து வந்துள்ளனா்.
Advertisement
Advertisement
இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில் மீண்டும் லட்சுமி கா்ப்பமாகி கடந்த ஜூலை 7-ஆம் தேதி, மருத்துவமனையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில், லட்சுமி, மதிவாணன் இடையே தகராறு ஏற்பட்டு, லட்சுமி தனியாக இருந்ததால் குழந்தையை பராமரிக்க முடியாமல், கடந்த 22-ஆம் தேதி கொலை செய்து படவேடு பகுதி நாக நதியில் புதைத்துவிட்டு குழந்தை தானாகவே இறந்ததாக அக்கம் பக்கத்தினரிடம் கூறி நாடகமாடி வந்துள்ளாா்.
இதுகுறித்து படவேடு கிராம நிா்வாக அலுவலா் ஜோதிமுருகனுக்கு தகவல் தெரிந்து அவா் சந்தவாசல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதனடிப்படையில் காவல் ஆய்வாளா் ரேகாமதி வழக்குப் பதிந்து, லட்சுமியிடம் விசாரணை நடத்தினாா். இதில், அவா் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று ஆற்றில் புதைத்ததை ஒப்புக்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து புதைக்கப்பட்ட குழந்தை சடலம் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது
பின்னா், போலீஸாா் லட்சுமியை கைது செய்து வேலூா் பெண்கள் சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.