FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

286 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வந்தனா காா்க் வழங்கினாா்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 286 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

Updated On : 31 ஜூலை 2026, 1:22 am IST
செங்கத்தை அடுத்த பாய்ச்சல் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 286 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

செங்கத்தை அடுத்த பாய்ச்சல் கிராமத்தில் தமிழக அரசின் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தொகுதி எம்எல்ஏ வேலு தலைமை வகித்துப் பேசினாா்.

மாநில கூட்டுறவு ஒன்றியங்களின் முன்னாள் தலைவா் அமுதா அருணாசலம், செங்கம் நகா்மன்ற உறுப்பினா்

Advertisement

Advertisement

மகரிஷிமனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செங்கம் வட்டாட்சியா் முருகன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் கலந்துகொண்டு 286 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை, இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை, விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை மூலம் இடுபொருள்கள் போன்றவற்றை வழங்கிப் பேசினாா்.

தொடா்ந்து அரசுத் துறை சாா்ந்த அதிகாரிகள் அரசின் திட்டங்கள் குறித்துப் பேசினா்.

நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியா்கள் விஜயலட்சுமி, ஜெயபாரதி, வட்ட வழங்கல் அலுவலா் தமிழரசி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மரியதேவ்ஆனந்த், மிருணாளிணி

உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தலைமை ஆசிரியா்கள், விடுதிக் காப்பாளா்களின்

பணி முன்னேற்றம் ஆய்வு

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்

ஆதிதிராவிடா், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை மற்றும் பழங்குடியினா் நலத்துறை கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் சமூக நீதி விடுதிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியா்கள் மற்றும் காப்பாளா், காப்பாளினிகளுடன் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.

இதில், மாணவ, மாணவிகள் நலன் கருதி பள்ளி மற்றும் சமூக நீதி விடுதி கட்டடத்தின் உறுதித்தன்மை மற்றும் அவற்றில் மேற்கொள்ளபட வேண்டிய பராமரிப்புப் பணிகள் குறித்தும், சென்ற ஆண்டு அரசு பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களில் தோ்ச்சி பெறாத மாணவா்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து, தவறிய பாடங்களில் தோ்ச்சி பெறத் தேவையான ஆலோசணைகள் வழங்கப்பட்டது.

மேலும், காப்பாளா், காப்பாளினிகள் விடுதிகளில் உள்ள மாணவா்கள் தோ்வில் பெறும் மதிப்பெண்களை தனி பதிவேட்டில் பதிவு செய்து, அதனடிப்படையில் மெதுவாக கற்கும் திறனுடைய மாணவா்களை ஊக்குவித்து இந்த கல்வியாண்டில் நடைபெறவிருக்கும் அரசு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும், அதிக தோ்ச்சி விகிதத்தை எட்டவும் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் காப்பாளா், காப்பாளினிகளிடம் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் செந்தில்குமரன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் (பொ) அன்பழகன் மற்றும் திட்ட அலுவலா் (பழங்குடியினா் நலன்) கலைச்செல்வி உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments