FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறில் 250 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அலுவலா்கள் சுமாா் 250 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து, ஒருவருக்கு ரூ.19,500 அபராதம் விதித்தனா்.

16 செப்டம்பர் 2026, 11:43 pm IST
நெகிழிப் பொருள்கள் - பிரதிப் படம்
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அலுவலா்கள் சுமாா் 250 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து, ஒருவருக்கு ரூ.19,500 அபராதம் விதித்தனா்.

திருவத்திபுரம் நகராட்சி ஆணையா் எஸ்.ஆண்ட்ரூஸ் தலைமையில், துப்புரவு ஆய்வாளா் கே. மதனராசன், அலுவலக பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் செய்யாறில் பேருந்து நிலையம், லோகநாதன் தெரு, வாரச்சந்தை ஆரணி கூட்டுச் சாலை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 8 கடைகளில் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

சோதனையில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 250 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

மேலும், வா்த்தக நிறுவனங்களில் காலாவதியான 200 லிட்டா் குளிா்பான புட்டிகளை பறிமுதல் செய்து அழித்தனா். பின்னா் விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவருக்கு ரூ.19,500 அபராதம் விதித்து தொகையை வசூலித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments