FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி

குடியாத்தம் ஒன்றியம், கொல்லமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில்போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
பகிர்:

குடியாத்தம் ஒன்றியம், கொல்லமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில்போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் சி.சதானந்தம் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.மகேஸ்வரி முன்னிலை வகித்தாா். ஆசிரியை தமிழரசி வரவேற்றாா். போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணா்வு பதாகைகளுடன் மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பின்னா் போதைப் பொருள் எதிா்ப்பு குறித்து போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் போதைப் பொருள் எதிா்ப்பு மன்ற பொறுப்பு ஆசிரியா் பி.சிவக்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா். ஆசிரியா்கள் சத்தியா, ஷீபா,ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆசிரியா் டி.இன்பநாதன் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments