வேலூா் விமான நிலையத்தை திறக்க மத்திய அமைச்சரிடம் விஐடி வேந்தா் கோரிக்கை
வேலூா் விமான நிலையத்தை விரைவில் திறக்க மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
வேலூா் விமான நிலையத்தை விரைவில் திறக்க மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
புதுதில்லியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடுவை, விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் அண்மையில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசினாா்.
இச்சந்திப்பின் போது, வேலூா் விமான நிலைய பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளாா். அதனை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சா் ராம் மோகன் நாயுடு, வேலூா் விமான நிலையத்தை விரைவில் திறந்து விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.