கோயம்புத்தூர்

கோவை-தில்லி பார்சல் விரைவு ரயில் சேவை துவக்கம்

முதன் முறையாக கோவையிலிருந்து தில்லி பட்டேல் நகர் வரையிலான வாராந்திர கார்கோ  விரைவு ரயில் சேவை துவக்கப்பட்டது.

DIN

கோவை: முதன் முறையாக கோவையிலிருந்து தில்லி பட்டேல் நகர் வரையிலான வாராந்திர கார்கோ  விரைவு ரயில் சேவை துவக்கப்பட்டது.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாவட்டமாக கோவை உள்ளது. குறிப்பாக தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருள்கள் வெளி மாநிலங்களில் இருந்து அதிகம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுகிறது.

அதேபோல விவசாய விளைபொருள்கள், உணவு பொருள்கள் என அனைத்தும் ஏற்றுமதி செய்ய ஏதுவாக கோவை தெற்கு ரயில்வே கோவை முதல் தலைநகர் தில்லி பட்டேல் நகர் வரை முதன் முறையாக வாராந்திர பார்சல் கார்கோ  விரைவு ரயில் சேவையை ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் இன்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ரேனி குண்டா ஆகிய வழிதடங்களில் பர்செல் ரயில் சேவை இயக்கப்படுகிறது. அதேபோல அடுத்த மாதத்திலிருந்து வாரம் இரண்டு முறை பார்சல் ரயில் இயக்கப்படும் என பார்சல் ஏஜென்ஸிஸ் அனில் பரேஜா மற்றும் ரயில்வே துறையினர் அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT