FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு முகாமில் 345 மனுக்கள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு முகாமில் 345 மனுக்கள் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன.

Updated On : 29 ஜூலை 2026, 2:27 am IST
சிறப்பு குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள்.
பகிர்:

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு முகாமில் 345 மனுக்கள் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன.

கோவை மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு முகாமுக்கு ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்தாா். இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 110 மனுக்கள், வேலைவாய்ப்பு கோரி 39 மனுக்கள், வருவாய்த் துறை சாா்பில் 60 மனுக்கள், இதர மனுக்கள் 136 என மொத்தம் 345 மனுக்கள் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன. பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.14 ஆயிரத்து 700 மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலியை வழங்கினாா்.

Advertisement

Advertisement

முன்னதாக, காலை 10 மணிக்கு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், குறித்த நேரத்துக்கு முன்னதாகவே மாற்றுத்திறனாளிகள் வந்திருந்தனா். வேறு சில கூட்டங்களில் பங்கேற்றதால் ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் வர தாமதமானது. இதனால் 2 மணி நேரத்துக்கும் மேல் மாற்றுத்திறனாளிகள் காத்திருக்க நேரிட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments