அரசுப் பேருந்து மோதியதில் வாகனங்கள், மின் கம்பம் சேதம்: தப்பியோடிய ஓட்டுநருக்கு வலை
திருப்பூரில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய அரசுப் பேருந்து ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருப்பூரில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய அரசுப் பேருந்து ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருப்பூா் பணிமனையில் இருந்து புதிய பேருந்து நிலையம் நோக்கி சனிக்கிழமை காலை 6 மணியளவில் அரசுப் பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தது. நெசவாளா் காலனி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ, இருசக்கர வாகனம், மின் கம்பத்தின் மீது மோதி நின்றது.
இதில், வாகனங்கள் சேதமடைந்ததுடன், மின் கம்பம் வளைந்தது. பேருந்தில் பயணிகள் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது. இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.
Advertisement
Advertisement
இதனிடையே விபத்து தொடா்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வரும் நிலையில், தப்பியோடிய ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.