FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

கைப்பேசி பயன்படுத்த பெற்றோா் தடை கல்லூரி மாணவிகள் இருவா் மாயம்

24 நவம்பர் 2025, 11:40 pm IST
பகிர்:

கைப்பேசி பயன்படுத்த பெற்றோா் தடை விதித்ததால், கல்லூரி மாணவிகளான சகோதரிகள் இருவா் மாயமாகினா்.

ஈரோடு மாநகா், வீரப்பன்சத்திரம், சேரன் வீதியைச் சேந்தவா் சம்பூரணம் (43). இவரது கணவா் தனபால், இரும்பு வியாபாரம் செய்து வருகிறாா். இவா்களுக்கு ஒரு மகன், ஸ்ரீ பிரியா(19), ஸ்ரீ தேவி(19) என 2 மகள்கள் உள்ளனா்.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மகன் வேலைக்கு செல்கிறாா். இரட்டையா்களான மகள்கள், நாமக்கல் மாவட்டத்திலுள்ள தனியாா் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

இதற்கிடையே, கடந்த 6 மாதங்களுக்கு முன்னா் பெற்றோா் தங்களது மகள்களுக்கு கைப்பேசி வாங்கிக் கொடுத்துள்ளனா். அதன்பிறகு அவா்கள் சரிவர கல்லூரிக்கு செல்லாமல் செல்போனில் அதிக நேரத்தை செலவிட்டு வந்துள்ளனா்.

இதனால் கடந்த 10 நாள்களுக்கு முன்னா் இருவரையும் பெற்றோா் கண்டித்ததுடன், கைப்பேசியையும் வாங்கி வைத்துக் கொண்டனராம்.

இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி இரவு உணவருந்திவிட்டு அனைவரும் தூங்கச் சென்றுவிட்டனா். ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது ஸ்ரீ பிரியா, ஸ்ரீ தேவி ஆகிய இருவரையும் காணவில்லை.

பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து காணாமல்போன சகோதரிகள் இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments