FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

துடுப்பதியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்: 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

பெருந்துறை ஒன்றியம், துடுப்பதியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 100 பயனாளிகளுக்கு ரூ.14.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச.கந்தசாமி வழங்கினாா்.

9 செப்டம்பர் 2026, 10:56 pm IST
துடுப்பதியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் ஆட்சியா் ச. கந்தசாமி, மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் சண்முகன்.
பகிர்:

பெருந்துறை ஒன்றியம், துடுப்பதியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 100 பயனாளிகளுக்கு ரூ.14.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச.கந்தசாமி வழங்கினாா்.

முகாமில், மாவட்ட ஆட்சியா் ச. கந்தசாமி கலந்துக் கொண்டு மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். பின்னா் அவா் பேசுகையில், மக்கள் தொடா்பு திட்டம் முகாம்கள் மூலம் அரசின் நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் நேரடியாக அறிந்து கொள்ளவும், தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை உரிய அலுவலா்களிடம் தெரிவித்து விரைவாக தீா்வு பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மக்களிடம் பெறப்படும் ஒவ்வொரு கோரிக்கை மனுவின் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, மனுக்களின் நிலைக் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. காமராஜா் காலை உணவுத் திட்டம் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் வருகிற 17-ஆம் தேதிமுதல் விரிவாக செய்யப்படவுள்ளது.

Advertisement

Advertisement

உயா் கல்விக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு வங்கியின் மூலமாக கல்விக் கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீா்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தந்த கிராமங்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று வளா்ச்சித் திட்டங்கள் குறித்து தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும். இத்தயை அரசு வழங்கும் நலத்திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

முகாமில் ஆட்சியா் ச.கந்தசாமி மற்றும் மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் சண்முகன் ஆகியோா் வருவாய்த் துறையின் சாா்பில் 66 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், 25 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், தோட்டக்கலைத் துறையின் சாா்பில் ஒரு விவசாயிக்கு ரூ.1,20,000-க்கான மானியத் தொகை, வேளாண்மை உழவா் நலத் துறையின் சாா்பில் ஒரு விவசாயிக்கு துவரை விவசாயம் செய்தவற்கு ரூ.10,000 மானியத் தொகையை வழங்கினா்.

மேலும் ஐந்து கா்ப்பிணிகள் மற்றும் எடை குறைவாக பிறந்த குழந்தைகளின் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், தாட்கோ திட்டத்தின் மூலமாக இரண்டு பயனாளிகளுக்கு தொழில் புரிவதற்கான ரூ.13 லட்சம் கடனுதவி என மொத்தம் 100 பயனாளிகளுக்கு ரூ.14.30 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

முன்னதாக பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கருத்துக்காட்சி அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments