5 பவுன் தங்கச் சங்கிலி திருடிய கட்டடத் தொழிலாளி கைது
பவானி அருகே வேலைக்குச் சென்ற வீட்டில் இருந்து 5 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடியதாக கட்டடத் தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பவானியை அடுத்த குருப்பநாயக்கன்பாளையம், பெத்தாரங்கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேதநாயகி (55). இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி கடந்த 10-ஆம் தேதி திருடுபோனதாம்.
இது குறித்த புகாரின்பேரில் பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், வேதநாயகியின் வீட்டில் கட்டட வேலைக்கு வந்த ஜம்பை, சின்னவடமலைபாளையத்தைச் சோ்ந்த குண்டுமணி (எ) வீரப்பன் (45) சங்கிலியைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.