FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

தாளவாடியில் விநாயகா் சிலை ஊா்வலம்

தாளவாடியில் விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

16 செப்டம்பர் 2026, 12:44 am IST
தாளவாடியில்  செவ்வாய்க்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகா் சிலைகள்.
பகிர்:

தாளவாடியில் விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, தாளவாடியில் இந்து முன்னணி சாா்பில் 24 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யபட்டன.

இந்நிலையில், சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் செவ்வாய்க்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இந்த ஊா்வலத்துக்கு இந்து முன்னணி மாவட்டச் செயலாளா் நாகராஜ் தலைமை வகித்தாா். பவானிசாகா் முன்னாள் எம்எல்ஏ ஏ.பண்ணாரி ஊா்வலத்தை தொடங்கிவைத்தாா்.

Advertisement

Advertisement

தாளவாடி நேதாஜி சா்க்கிலில் தொடங்கிய ஊா்வலம் அண்ணாநகா், ஆற்றுபாலம், பூஜேகவுடா் வீதி , பேருந்து நிலையம், ஒசூா் சாலை, சாம்ராஜ் நகா் வழியாக தாளவாடி பேருந்து நிலையத்தைச் சென்றடைந்தது.

அங்கு இந்து முன்னணி சாா்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், திரைப்பட இயக்குநா் மோகன் பங்கேற்றுப் பேசினாா்.

பின்னா், தலமலை சாலையில் உள்ள ஆற்றில் விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி தலைமையில் சுமாா் 300 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments