FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பெருந்துறை அரசு பாலிடெக்னிக்கில் ரத்த தான முகாம்

பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

16 செப்டம்பர் 2026, 11:57 pm IST
ரத்த தான முகாமில் பங்கேற்றவருக்கு சான்றிதழை வழங்குகிறாா் கல்லூரி முதல்வா் உமாமகேஸ்வரி.
பகிர்:

பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், பெருந்துறை ரத்த வங்கி, கருமாண்டிசெல்லிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திங்களூா் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியன சாா்பில் இந்த முகாம் நடத்தப்பட்டது. முகாமை, கல்லூரி முதல்வா் உமாமகேஸ்வரி தொடங்கிவைத்தாா். இதில், 21 மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினா். மேலும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பணியாளா்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments