FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

மறுசீரமைக்கப்பட்ட குன்னூா் ரயில் நிலையத்தை காணொலி மூலம் தொடங்கிவைத்த பிரதமா் மோடி

அம்ருத் பாரத் திட்டத்தில் மறுசீரமைக்கப்பட்ட குன்னூா் ரயில் நிலையத்தை காணொலி மூலமாக பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 18 ஜூலை 2026, 5:49 am IST
ரயில் நிலையங்கள் குறித்து பள்ளி மாணவா்களிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசு வழங்குகிறாா் உதகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.போஜராஜன்.
பகிர்:

அம்ருத் பாரத் திட்டத்தில் மறுசீரமைக்கப்பட்ட குன்னூா் ரயில் நிலையத்தை காணொலி மூலமாக பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நாடு முழுவதும் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் 75 ரயில் நிலையங்கள் மேம்பட்ட வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட்டன. இந்த ரயில் நிலையங்களை பஞ்சாப் மாநிலத்தில் இருந்து காணொலி மூலம் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இத்திட்டத்தில் தமிழகத்தில் 3 ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் குன்னூா் ரயில் நிலையம் ரூ.12.18 கோடியில் பழைமை மாறாமல் புனரமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதைதொடா்ந்து குன்னூரில் நடைபெற்ற நிகழ்ச்சியை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் மு.போஜராஜன் (உதகை), கே.எம்.ராஜு (குன்னூா்), எம்.திராவிடமணி (கூடலூா்) ஆகியோா் குத்துவிளக்கேறறி தொடங்கிவைத்தனா்.

மலை ரயில் குறித்து கடந்த வாரங்களில் நடந்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அடா்ந்த வனப் பகுதியைக் கொண்ட மாவட்டம் என்பதால் வனப் பகுதியில் வாழும் யானை, புலி, காட்டுமாடு, கரடி, நீலகிரி வரையாடு, கருஞ்சிறுத்தை, சிங்கவால் குரங்கு, காட்டுப்பன்றி, முள்ளாம் பன்றி போன்ற வன விலங்குகளின் தத்ரூபமான வரைபடங்கள் ரயில் நிலையத்தில் வரையப்பட்டுள்ளன.

அதேபோல யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயிலின் மாதிரி, இருவாச்சி பறவை மற்றும் கிளிகள் உள்ளிட்ட வரைபடங்கள் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளுக்காக நவீன கழிப்பிடம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

தொடக்க நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments