FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

வயநாடு வன விலங்கு சரணாலயத்தில் மக்னா யானை உயிரிழப்பு

வயநாடு வன விலங்கு சரணாலயத்தில் யானைகளுக்கிடையே நடைபெற்ற மோதலில் மக்னா யானை உயிரிழந்தது.

16 செப்டம்பர் 2026, 12:43 am IST
உயிரிழந்த மக்னா யானை.
பகிர்:

வயநாடு வன விலங்கு சரணாலயத்தில் யானைகளுக்கிடையே நடைபெற்ற மோதலில் மக்னா யானை உயிரிழந்தது.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், முத்தங்கா வன விலங்கு சரணாலயத்தில் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க மக்னா யானை உயிரிழந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

யானையின் உடலைக் கைப்பற்றி வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, யானையின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இது குறித்து வனத் துறையினா் கூறுகையில், யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மக்னா உயிரிழந்துள்ளது.

உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்த பின் முழுமையான விவரம் தெரியவரும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments