FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

அவிநாசியில் விஏஓ லஞ்சம் பெறுவது தொடர்பான பட்டியலால் பரபரப்பு

கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெறுவது தொடர்பான விபர பட்டியல் குறித்து பேனர் வைக்கப்பட்டதால் அவிநாசியில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 10 பிப்ரவரி 2022, 1:27 pm IST
பகிர்:

அவிநாசி: கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெறுவது தொடர்பான விபர பட்டியல் குறித்து பேனர் வைக்கப்பட்டதால் அவிநாசியில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வருவாய் வட்டத்திற்கு உள்பட்ட ஒரு கிராமத்தில் இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவற்றிற்கு, கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெறுவது தொடர்பாக, பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

அந்த பேனரில், முக்கிய அறிவிப்பு எனக் குறிப்பிட்டு, மணிகாரர் அம்மாவிடம் சென்று யாரும் வாக்கு வாதம் செய்ய வேண்டாம் (விலை பட்டியல் எனக் குறிப்பிட்டு பட்டா சிட்டா, இறப்புச் சான்றிதழ், அடங்கல், வாரிசு சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ் பெறுவதற்கு(ரூ. 72,000 எனக் குறிப்பிட்டு), திருமண பதிவு சான்றிதழ், இடம் அளந்து கொடுக்க, இருப்பிட சான்றிதழ், விதவை சான்றிதழ், கணவரால் கைவிடபட்டவர் (சான்றிதழ்), பிறப்பிட சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுவதற்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என பட்டியல் அடக்கிய பேனர் வைக்கப்பட்டதால் அவிநாசி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments