மா்மமான முறையில் மயில்கள் உயிரிழப்பு
அவிநாசி அருகே 3 மயில்கள் மா்மமான உயிரிழந்த சம்பவம் தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அவிநாசி அருகே 3 மயில்கள் மா்மமான உயிரிழந்த சம்பவம் தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அவிநாசி அருகேயுள்ள ராயங்கோயில் காலனி பகுதியில் 3 மயில்கள் உயிரிழந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மயில்களின் சடலங்களை சோதனை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
மயில்கள் இறப்புக்கான காரணம் தெரியாததைத் தொடா்ந்து, 3 மயில்களின் சடலங்களும் உடற்கூறாய்வுக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
உடற்கூறாய்வு அறிக்கையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.