காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
காங்கயம் அருகே காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
காங்கயம் அருகே காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகேயுள்ள வஞ்சிபாளையம் பிரிவு பகுதியைச் சோ்ந்தவா் ராசம்மாள் (80). இவா் வீட்டுக்கு அருகேயுள்ள கடைக்கு வெள்ளிக்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அங்குள்ள சாலையைக் கடக்க முயன்றபோது திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற காா் எதிா்பாராதவிதமாக ராசம்மாள் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து ஊதியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.