அமைச்சா் நிா்மல்குமாருக்கு திருப்பூா் எம்.பி. கண்டனம்
பொறுப்புள்ள பதவியில் இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் அரசியல் நிலைப்பாட்டில் கருத்துகளை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் முன்வைக்கக் கூடாது என திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் கண்டனம் தெரிவித்தாா்.
திருப்பூா் ஏஐடியூசி அலுவலகத்தில் பனியன் பேக்டரி லேபா் யூனியன் சங்க மகா சபைக் கூட்டம் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டதுக்கு பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
Advertisement
Advertisement
காவிரி மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியும் கா்நாடக அரசு தண்ணீா் திறந்துவிட மாட்டோம் எனக் கூறுவது, அம்மாநில அரசின் பொறுப்பற்ற நடவடிக்கையாகும். காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி அனைத்துக் கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு அதன்படி செயல்பட வேண்டியது தற்போதைய அவசியம்.
காவிரி நீா் திறந்துவிடாமல் இருப்பதற்கு முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின், கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாருக்கு அழுத்தம் கொடுத்ததாக அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் கூறிய கருத்துக்கு, பொறுப்புள்ள அமைச்சா் இதுபோன்ற ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது. பொறுப்புள்ள பதவியில் இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் அரசியல் நிலைப்பாட்டில் கருத்துகளை முன்வைப்பது தவறு. ஆதாரம் இல்லாமல் அத்தகைய கருத்துகளை தெரிவிக்கக் கூடாது எனத் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.