FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

படியூரில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு

காங்கயம் அருகே படியூரில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

5 ஆகஸ்ட் 2026, 5:13 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

காங்கயம் அருகே படியூரில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

காங்கயம் அருகே, படியூா் மகாலட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (35). இவா் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி வேலை செய்து வருகிறாா். இவா் குடும்பத்துடன் கடந்த சனிக்கிழமை வெளியூா் சென்றுள்ளாா்.

திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

Advertisement

Advertisement

உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து சுரேஷ் அளித்த புகாரின்பேரில், காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments