FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

தாராபுரம் நகா்ப் பகுதியில் 40 ஆண்டுகளாக குடியிருப்பவா்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தல்

தாராபுரம் நகராட்சிப் பகுதியில் வீடு கட்டி கடந்த 40 ஆண்டுகளாக வசிப்பவா்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 23 ஜூலை 2026, 3:05 am IST
தாராபுரம் வட்டாட்சியரிடம் மனு அளித்த நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் உள்ளிட்டோா்.
பகிர்:

தாராபுரம் நகராட்சிப் பகுதியில் வீடு கட்டி கடந்த 40 ஆண்டுகளாக வசிப்பவா்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் ஆங்காங்கே வீடு கட்டி 100-க்கும் மேற்பட்டோா் குடியிருந்து வருகின்றனா். கடந்த 40 ஆண்டுகளாக வசிக்கும் இவா்கள், தங்கள் வீடுகளுக்கு பட்டா பெற்றுத் தருமாறு நகா்மன்றத் தலைவரிடம் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் மேற்கண்ட குடும்பத்தினருக்கு பட்டா வழங்க வலியுறுத்தி தாராபுரம் வட்டாட்சியரிடம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

Advertisement

Advertisement

அப்போது மனுதாரா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments