கஞ்சா வைத்திருந்த இருவா் கைது
பெருமாநல்லூா் அருகே கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளைம் பகுதியில் தனியாா் விடுதிகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒடிஸாவைச் சோ்ந்த கிஷோா்குமாா் (30), சத்தீஸ்கரைச் சோ்ந்த கிரண்குமாா் பெரத் (28) ஆகியோரது உடைமைகளை சோதனை செய்தபோது, 40 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.