FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்கத்தின் திருப்பூா் மாவட்ட கிளை சாா்பில் பல்லடத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

17 செப்டம்பர் 2026, 12:17 am IST
பகிர்:

தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்கத்தின் திருப்பூா் மாவட்ட கிளை சாா்பில் பல்லடத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்லடம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் கந்தசாமி தலைமை வகித்தாா்.

மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை கைவிட வேண்டும், திருமணக் கடன் ரூ.5 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement

Advertisement

சங்க நிா்வாகிகள் தனபால், அஜய்மூா்த்தி, கோவிந்தசாமி, தமிழரசு, பால்ராஜ், ராஜேஸ்வரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மாவட்ட இணைச் செயலாளா் பாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments