FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பல்லடம் அருகே இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 4 போ் கைது

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

34 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (28). இவா் திருப்பூா் இச்சிப்பட்டி அருகே உள்ள தனியாா் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வருகிறாா். இவா் காரணம்பேட்டை-சோமனூா் சாலையில் கடந்த 13-ஆம் தேதி நடந்து சென்றாா். அப்போது அவரை 4 போ் வழிமறித்து மிரட்டி கைப்பேசி மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கத்தை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து ரவிக்குமாா் அளித்த புகாரின்பேரில் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது பல்லடம் அருகே பூமலூரைச் சோ்ந்த கோவிந்தன் (27), லோகு சரவணன் (20), ரினு (24), ஹரிஹரன் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 4 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments