FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

மான் வேட்டை: ரூ.1.10 லட்சம் அபராதம்

Updated On : 20 ஜூலை 2026, 1:47 am IST
மான் - கோப்புப் படம்
பகிர்:

அரூா் அருகே மான் வேட்டையாடிய தொழிலாளிக்கு ரூ. 1.10 லட்சம் அபராதம் சனிக்கிழமை விதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், பையா்நாய்க்கன்பட்டி வனப்பகுதியில் அடிக்கடி மான்கள் வேட்டையாடப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, கோட்டப்பட்டி வனச்சரகா் மு.ஆனந்தகுமாா் தலைமையில் செங்கலேரி காப்புக் காட்டில் வனத் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, கத்தரிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கருப்பன் மகன் சின்னக்கண்ணு (48) புள்ளிமானை வேட்டையாடி வீட்டில் சமையல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, சின்னக்கண்ணுவை வனத் துறையினா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

வன விலங்குகளை வேட்டையாடிய குற்றத்துக்காக சின்னகண்ணுவுக்கு ரூ. 1.10 லட்சம் அபராதம் விதித்து தருமபுரி மாவட்ட வன அலுவலா் கா.ராஜங்கம் உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments