FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

"எத்தனாலை மாற்று எரிபொருளாக பயன்படுத்த வேண்டும்'

எத்தனாலை மாற்று எரி பொருளாக பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்தார்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

எத்தனாலை மாற்று எரி பொருளாக பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அரூரில் அவர் புதன்கிழமை கூறியது: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக, இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவில் அதிகளவில் உற்பத்தியாகும் மரவள்ளிக் கிழங்கில் இருந்து எத்தனால் தயாரிக்க முடியும். இந்த எத்தனாலை வாகனங்களின் மாற்று எரிபொருளாக பயன்படுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளின் கரைகளில் பனை விதைகளை நடவு செய்ய வேண்டும். காவிரியின் உபரி நீரை பயன்படுத்தி தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில்  உள்ள ஏரி, குளம், குட்டைகளை நிரப்ப வேண்டும். தமிழக அரசு வரும் பட்ஜெட்டில் நீர்பாசனத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments