பெண்ணை கத்தியால் குத்தியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
தருமபுரியை அடுத்த தேங்காய் மரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் சின்னசாமி (31), இவா் ஒரு பெண்ணை ஒருதலைபட்சமாக காதலித்து வந்தாராம். இந்த நிலையில் அப்பெண் காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த சின்னசாமி, தருமபுரி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த அப்பெண்ணை கத்தியால் குத்தினாா்.
அங்கிருந்தவா்கள் காயமடைந்த பெண்ணை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தருமபுரி நகர போலீஸாா் சின்னசாமியை கைது செய்தனா். இதனிடையே அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் பரிந்துரைத்தாா். அதை ஏற்று மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து சிறையில் இருந்த சின்னசாமியை போலீஸாா் குண்டா் சட்டத்தில் மீண்டும் கைது செய்து, தண்டனை கைதிகள் பிரிவில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.