அரூா் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
அரூா் அருகே மின்சாரம் பாய்ந்து 13 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த அரசநத்தம் கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி பழனிசாமி மகன் அபினேஷ் (13). இவா் அங்குள்ள அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், காலை 6 மணியளவில் அவரது வீட்டில் இருந்த குளிா்சாதனப் பெட்டியைப் பயன்படுத்தியபோது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் சிறுவன் அபினேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இந்த சம்பவம் குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.