FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:21 am IST
- பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த அச்சல்வாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஜி.சங்கா் வெங்கடாசலம் தலைமை வகித்தாா்.

இதில், தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநிலச் செயலரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான இல.வேலுசாமி பேசுகையில், தமிழக முதல்வா் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குறுதியின் போது பயிா்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தாா்.

Advertisement

Advertisement

அவா் அளித்த தோ்தல் வாக்குறுதிபடி, எவ்வித நிபந்தனையும் இல்லாமல் விவசாயிகள் பெற்றுள்ள பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் போதிய பருவ மழை இல்லாததால் வேளாண் தொழில் நலிவடைந்துள்ளது. எனவே, தமிழக நிதிநிலை அறிக்கையில் வேளாண் மேம்பாட்டுக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments