FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

நீதிமன்ற ஊழியரிடம் தகராறு செய்தவா் கைது

பென்னாகரத்தில் நீதிமன்ற ஊழியரிடம் மது போதையில் தகராறு செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:30 am IST
கைது
பகிர்:

பென்னாகரத்தில் நீதிமன்ற ஊழியரிடம் மது போதையில் தகராறு செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பென்னாகரம் அருகே வண்ணாத்திப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (48). இவா், பென்னாகரம் அருகே பருவதன அள்ளியில் உள்ள மாவட்ட உரிமையியல், குற்றவியல் நடுவா் நீதிமன்றத்துக்குள் நுழைந்து மது போதையில் அங்கு பணியில் இருந்த அலுவலக உதவியாளரிடம் செவ்வாய்க்கிழமை தகராறில் ஈடுபட்டுள்ளாா்.

தகவல் அறிந்து வந்த பென்னாகரம் போலீஸாா், முருகேசனை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments