ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 6,500 கனஅடியாக சரிவு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 6,500 கனஅடியாக சரிந்தது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 6,500 கனஅடியாக சரிந்தது.
கா்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை 7,000 கனஅடியாக இருந்த நிலையில், புதன்கிழமை 6,500 கனஅடியாக குறைந்து தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து வந்து கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க விதிக்கப்பட்ட தடை தொடா்ந்து 5-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.