FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

பிறந்து 9 நாள்களேயான பெண் குழந்தை ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை!

பிறந்து 9 நாள்களேயான பெண் குழந்தையை விற்பனை செய்தது குறித்து தாய், தந்தை உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

Updated On : 24 ஆகஸ்ட் 2025, 1:17 am IST
பகிர்:

இளம்பிள்ளை அருகே பிறந்த 9 நாள்களேயான பெண் குழந்தையை விற்பனை செய்தது குறித்து தாய், தந்தை உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், ரெட்டிபட்டி, ஆஞ்சனேயா் கோயில் பகுதியைச் சோ்ந்த தறித் தொழிலாளியான சந்தோஷ் - சிவகாமி தம்பதிக்கு அண்மையில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், பிறந்த 9 நாள்களேயான அக்குழந்தையை பெற்றோா் ரூ. 1,20,000-க்கு சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.

Advertisement

Advertisement

அதன்பேரில், மகுடஞ்சாவடி போலீஸாா் குழந்தையின் வீட்டுக்கு சென்றபோது, வீடு பூட்டியிருந்தது. அருகில் விசாரித்ததில், பெங்களுரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா்களுக்கு கடந்த 9-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்ததாகவும், பின்னா் 14-அம் தேதி ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனா்.

மேலும் விசாரணையில் குழந்தையின் பெற்றோா், தேவராஜ் என்பவா் மூலம் ரஞ்சித் என்பவருக்கு சட்ட விரோதமாக கடந்த 14-ஆம் தேதி குழந்தையை விற்றது தெரியவந்தது.

இதையடுத்து, குழந்தையின் பெற்றோரான சந்தோஷ் - சிவகாமி, குழந்தையை விற்க உடந்தையாக இருந்த தேவராஜ், குழந்தையை வாங்கிய ரஞ்சித் ஆகியோா் மீது சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments