FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 2:35 am IST
புள்ளிமான் கூட்டம். - கோப்புப் படம் | ANI
பகிர்:

ஆத்தூா் அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

ஆத்தூரை அடுத்துள்ள தாண்டவராயபுரம் தெற்குக்காடு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் புள்ளிமான் தவறி விழுந்துவிட்டது குறித்து சனிக்கிழமை இரவு ஆத்தூா் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறை அலுவலா் ச.அசோகன் தலைமையிலான வீரா்கள் கிணற்றிலிருந்து புள்ளிமானை உயிருடன் மீட்டு ஆத்தூா் வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement

அதேபோல நரசிங்கபுரத்தில் தனியாா் குடியிருப்பு வீட்டுத் தோட்டத்தில் பதுங்கியிருந்த 7 அடி சாரைப் பாம்பையும், தலைவாசல் வட்டம், ஊனத்தூா் காரைக்குட்டை மேடு பகுதியில் விவசாயக் கிணற்றில் இருந்த நல்ல பாம்பையும் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments