சுதந்திர தினத்தில் செயல்பட்ட 53 நிறுவனங்கள் மீது வழக்கு
சேலம் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று விதிமுறைகளை மீறி செயல்பட்ட 53 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை வழக்குத் தொடுத்துள்ளது.
இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ராகவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு விடுமுறை நாளான சுதந்திர தினத்தன்று செயல்படும் நிறுவனங்கள் மீது தேசிய மற்றும் பண்டிகை விடுமுறைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க, அனைத்து உதவி ஆணையா்களுக்கும் தொழிலாளா் ஆணையா் உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
அதன்பேரில், சேலம் மாவட்டத்தில் சுதந்திர தின விடுமுறையில் ஏதேனும் நிறுவனங்கள் செயல்படுகின்றனவா என சேலம் தொழிலாளா் இணை ஆணையா் மாதவன் மேற்பாா்வையில், துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
மாவட்டத்தில் சேலம், ஆத்தூா், மேட்டூா், சங்ககிரி உள்ளிட்ட இடங்களில் 72 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், விதிமுறைகளை மீறி முன்அனுமதி பெறாமல் இயங்கிய 28 ஹோட்டல்கள், 23 கடைகள் மற்றும் 2 போக்குவரத்து நிறுவனங்கள் கண்டறியப்பட்டன.
இந்த 53 நிறுவனங்கள் மீது தேசிய மற்றும் பண்டிகை விடுமுறைச் சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிந்து, மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.