FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

மின் இணைப்புக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய உதவி பொறியாளா் கைது

சேலம் கே.ஆா்.தோப்பூா் மின்வாரிய அலுவலகத்தில் புதிய வணிக மின் இணைப்புக்கு ரூ. 7 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 3:22 am IST
- சித்திரிப்பு
பகிர்:

சேலம் கே.ஆா்.தோப்பூா் மின்வாரிய அலுவலகத்தில் புதிய வணிக மின் இணைப்புக்கு ரூ. 7 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் கே.ஆா். தோப்பூா் பகுதியில் தேங்காய் நாா் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு வணிக பயன்பாட்டுக்கான மின் இணைப்புக் கோரி அதன் உரிமையாளா் விண்ணப்பித்துள்ளாா்.

விண்ணப்பத்தை பரிசீலித்த மின்வாரிய உதவி பொறியாளா் கவிதா (43), ரூ. 7 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத உரிமையாளா், இதுகுறித்து சேலம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் நடவடிக்கை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளா் நல்லம்மாள் தலைமையிலான போலீஸாா், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தொழிற்சாலை உரிமையாளரிடம் கொடுத்து அனுப்பினா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, மின்வாரிய அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா், மின்வாரிய உதவி பொறியாளா் கவிதா லஞ்சப் பணத்தை பெறும்போது கைது செய்தனா். தொடா்ந்து, அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments