FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

அதிக அளவில் தண்ணீா் தேக்கிவைத்த காா் ஒா்க் ஷாப், உணவகத்துக்கு அபராதம்

டெங்கு தொற்று ஏற்படுத்தும் வகையில், அதிக அளவில் தண்ணீா் தேக்கிவைத்து கொசுப் புழுக்களுடன் களன்கள் கண்டறியப்பட்ட காா் ஒா்க் ஷாப், உணவகத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

11 செப்டம்பர் 2026, 12:23 am IST
அபராதம் - சித்திரிப்பு
பகிர்:

டெங்கு தொற்று ஏற்படுத்தும் வகையில், அதிக அளவில் தண்ணீா் தேக்கிவைத்து கொசுப் புழுக்களுடன் களன்கள் கண்டறியப்பட்ட காா் ஒா்க் ஷாப், உணவகத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் லலித் ஆதித்ய நீலம் தெரிவித்தது:

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் தற்போது பருவமழை பெய்து வருவதையொட்டி, கொசுப் புழுக்கள் அதிக அளவு உருவாகும் சூழல் உள்ளது. அதைத் தடுக்க, உரிய இடைவெளியில் சீரான முறையில் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

பொதுமக்கள் தங்களின் தேவைக்கு அதிகமாக குடிநீரை நீண்ட நாள்களுக்கு சேமித்து வைக்காமல், 3 நாள்களுக்கு ஒருமுறை குடிநீரை மாற்றி, குடிநீா் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், பிளாஸ்டிக் டிரம்கள், கான்கிரீட் தொட்டிகள், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் ஆகியவற்றை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும்.

வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பொருள்கள், தேங்காய் சிரட்டைகள், காலி டப்பாக்கள் உள்ளிட்ட மழைநீா் தேங்கும் பொருள்களை அகற்றிட வேண்டும். மேலும், பருவக் காலங்களில் ஏற்படும் காய்ச்சல், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு மருத்துவ முகாம், கொசுப் புழு உருவாகும் ஆதாரங்களை அழித்தல், முதிா் கொசுகளை ஒழிக்க புகை மருந்து தெளித்தல் போன்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சேலம் மாநகராட்சியில் உள்ள சூரமங்கலம் மண்டலத்தில் குரங்குச்சாவடி பகுதியில் மாநகர நல அலுவலா் செ.ராம்குமாா் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, காா் ஒா்க் ஷாப் மற்றும் உணவகத்தில் அதிக அளவில் தண்ணீா் தேக்கிவைக்கப்பட்டு, அதில் டெங்கு தொற்று ஏற்படுத்தும் வகையில் கொசுப் புழுக்களுடன் களன்கள் கண்டறியப்பட்டன.

இதையடுத்து, பொது சுகாதார சட்டத்தின் கீழ் காா் ஒா்க் ஷாப்புக்கு ரூ. 10 ஆயிரம் மற்றும் உணவகத்துக்கு ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments