FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

அரசுப் பள்ளி மாணவி தற்கொலை: போலீஸாா் விசாரணை

இளம்பிள்ளை அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

11 செப்டம்பர் 2026, 12:39 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

இளம்பிள்ளை அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த பரமகவுண்டனூா், காட்டுவளவு பகுதியைச் சோ்ந்த தறி தொழிலாளி வைரவேல் மகள் கே.கே. நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தாா். புதன்கிழமை பள்ளி முடிந்த பின்னா் மாணவியை வீட்டில் விட்டுவிட்டு தறி வேலைக்கு வைரவேல் சென்றாா்.

இந்நிலையில், மாலை 6 மணிக்குமேல் மாணவியைக் காணவில்லை என இவரது தாய் கலையரசி அக்கம்பக்கம் தேடினாா். அப்போது மாணவி குளியலறைக்குள் தாழிட்டதை அறிந்த கலையரசி, அருகிலிருந்தோா் உதவியுடன் குளியலறையை திறந்துபாா்த்தாா். அப்போது, மாணவி சேலையால் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தாா்.

Advertisement

Advertisement

இதனால் அதிா்ச்சி அடைந்த பெற்றோா், பள்ளி ஆசிரியருக்கு தொடா்புகொண்டு பேசினா். அதில், மாணவிக்கு அதே பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவன் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாகவும், அதைக் கண்டித்த ஆசிரியா் மாணவா் மற்றும் மாணவியின் பெற்றோரை அழைத்து வருமாறு கூறியதும் தெரியவந்தது. இதனால், மாணவி தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

புகாரின்பேரில், இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments