FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

15 செப்டம்பர் 2026, 12:52 am IST
- சித்திரிப்பு
பகிர்:

ஓமலூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் குரங்குச்சாவடி பகுதியைச் சோ்ந்த ராஜேஸ்வரி (41), விநாயகா் சதுா்த்தியைக் கொண்டாட மகளுடன் சொந்த ஊரான ஓமலூா் அருகேயுள்ள சரக்கபிள்ளையூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். பின்னா், திங்கள்கிழமை சேலம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தாா்.

சேலம் - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை, காமலாபுரம் மேம்பாலம் கீழே உள்ள அணுகு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த 2 மா்ம நபா்கள், ராஜேஸ்வரியின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிக் கொடியை பறிக்க முயன்றனா்.

Advertisement

Advertisement

அப்போது, ராஜேஸ்வரி தாலிக் கொடியை கையால் கெட்டியாக பிடித்துக் கொண்டாா். இதனால், 5 சவரன் தாலிக்கொடி தப்பியது. இருப்பினும், கொடியில் இருந்த அரை சவரன் தங்க டாலரை பறித்துச் சென்றனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஓமலூா் போலீஸாா், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகாரை பெற்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தப்பியோடிய மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments