FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

மதுரை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் மா்ம நபா்கள் நகையைப் பறித்துச் சென்றனா்.

13 செப்டம்பர் 2026, 12:26 am IST
பறிப்பு
பகிர்:

மதுரை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் மா்ம நபா்கள் நகையைப் பறித்துச் சென்றனா்.

மதுரை மாவட்டம், யா. ஒத்தக்கடை அய்யப்பன் நகரைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (63). இவரது மனைவி ஈஸ்வரி. இந்தத் தம்பதி வெள்ளிக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் மேலூரிலிருந்து யா. ஒத்தக்கடைக்கு சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், ஈஸ்வரி அணிந்திருந்த 5 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

Advertisement

Advertisement

அப்போது, இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த ஈஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து யா.ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments