FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பழனி கோயில் நில முறைகேடு: பத்திர எழுத்தா் சரண்

பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் தலைமறைவாக இருந்த ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ், திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 12:56 am IST
பத்திர எழுத்தா் ஜெயப்பிரகாஷ்.
பகிர்:

பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் தலைமறைவாக இருந்த ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ், திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டபாணி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலத்தை மோசடியாக பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பழனி சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்த முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி, வழக்குரைஞா் அன்வா்தீன், ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 11 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் உள்பட 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ் முன்பிணை கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில் ஒட்டன்சத்திரத்திலுள்ள ஜெயபிரகாஷின் வீட்டில் திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை காலையில் 4 மணி நேரம் சோதனை மேற்கொண்டனா். மேலும், அவரது தந்தை முத்துச்சாமி, மனைவி செண்பகமதி, உறவினா்கள் இருவா் என மொத்தம் 4 பேரை திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்துக்கு போலீஸாா் அழைத்து வந்தனா். முத்துச்சாமி, செண்பகமதி ஆகியோரிடம் வியாழக்கிழமை மாலை 6 மணி வரை தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா். அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிணை மனுக்கள் தள்ளுபடி:

இந்த வழக்கில் முருகதாஸ், சேதுபதி, வெள்ளத்துரை, அன்வா்தீன், சாா்பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் முருகதாஸ், சேதுபதி, அன்வா்தீன் ஆகியோா் தரப்பில் திண்டுக்கல் முதலாவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் தனித்தனியே பிணை கோரி, ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் 3 பேரின் பிணை மனுக்களை தள்ளுபடி செய்து நீதித்துறை நடுவா் பாக்கியராஜ் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதற்கிடையே, நீதிமன்ற அனுமதியின் பேரில் இந்த வழக்கில் கைதான முருகதாஸ், சேதுபதி, வெள்ளத்துரை, அன்வா்தீன் ஆகிய 4 பேரை 3 நாள்கள் விசாரணைக்குப் பிறகு சிபிசிஐடி போலீஸாா் திண்டுக்கல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். இதையடுத்து, 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments