FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

தலித் கிறிஸ்தவா்களுக்கு பட்டியலினத்தவா் அந்தஸ்து கோரி! கொடைக்கானல் ஆலயத்தில் கருப்புக் கொடி ஏற்றம்!

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 2:05 am IST
கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலய வளாகம் முன்பு திங்கள்கிழமை ஏற்றப்பட்ட கருப்புக் கொடி.
பகிர்:

கொடைக்கானலில் புனித சலேத் மாதா ஆலய வளாகத்தில் திங்கள் கிழமை தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி. பட்டியலில் சோ்க்கக் கோரி, மறைவட்டார அதிபா் கருப்புக் கொடி ஏற்றினாா்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செயிண்ட் மேரீஸ் சாலையிலுள்ள பழைமை வாய்ந்த புனித சலேத் மாதா தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 160-வது ஆண்டுத் திருவிழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

10-ஆவது நாளான திங்கள் கிழமை மாலை கொடைக்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தின் மறைவட்டார அதிபா் அருள் பணி ஜெயசீலன் தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி. பட்டியலில் சோ்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புனித சலேத் மாதா தேவாலயம் முன் கருப்புக் கொடி ஏற்றினாா். தொடா்ந்து பெருமாள்மலை, உகாா்த்தே நகா், பங்கு அருள் பணியாளா்கள் சாா்பில் ஜெப வழிபாடும், சிறப்புத் திருப்பலியும் நடைபெற்றது. இதில், திரளானோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments