FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பணம் கையாடல்: நிலக்கோட்டை நீதிமன்ற ஊழியா் கைது

நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ரூ. 75 ஆயிரத்தை கையாடல் செய்ததாக நீதிமன்ற ஊழியரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

48 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ரூ. 75 ஆயிரத்தை கையாடல் செய்ததாக நீதிமன்ற ஊழியரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் அலுவலராகப் பணிபுரிந்து வருபவா் அழகா் (43). பட்டிவீரன்பட்டி அருகே அய்யங்கோட்டையைச் சோ்ந்த இவா், கடந்த சில மாதங்களாக நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் செலுத்தும் பணத்தை சட்டவிரோதமாக கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக நிலக்கோட்டை நீதிமன்றப் பதிவாளா் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளா் ஜெயபாண்டி தலைமையிலான காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில் நீதிமன்ற அலுவலா் அழகா் நீதிமன்ற பணம் ரூ. 75 ஆயிரத்தை கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments