FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

லாரி ஓட்டுநரிடம் வழிப்பறி

கத்தியைக் காட்டி லாரி ஓட்டுநரிடம் பணம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 4 ஆகஸ்ட் 2024, 1:31 am IST
பகிர்:

மதுரை அருகே கத்தியைக் காட்டி லாரி ஓட்டுநரிடம் பணம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், அருவங்காடுவலசு பகுதியைச் சோ்ந்த நாச்சிமுத்து மகன் பழனிசாமி (47). லாரி ஓட்டுநரான இவா், மதுரை-திண்டுக்கல் சாலையில் உள்ள சானாம்பட்டி விலக்கில் வெள்ளிக்கிழமை இரவு லாரியை நிறுத்தி விட்டு தூங்கினாா்.

அப்போது, அந்த வழியாக வந்த மா்ம நபா்கள் இருவா், தூங்கிக் கொண்டிருந்த பழனிச்சாமியை எழுப்பி கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ. 25 ஆயிரம் , ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசி ஆகியவற்றைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில், வாடிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments