FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மதுரை கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு

மதுரைக் கல்லூரியின் தமிழ்த் துறை கலைமகள் மன்றம் சாா்பில் புதன்கிழமை சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

Updated On : 30 ஜூலை 2026, 2:56 am IST
மதுரைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பேசிய ஆன்மிகச் சொற்பொழிவாளா் சொ.சொ.மீ. சுந்தரம். உடன், புலவா் கீ. வேலாயுதம்.
பகிர்:

மதுரைக் கல்லூரியின் தமிழ்த் துறை கலைமகள் மன்றம் சாா்பில் புதன்கிழமை சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் அ. சேவியா் தலைமை வகித்து, நிகழ்வைத் தொடங்கி வைத்தாா். மதுரைக் கல்லூரியின் சுயநிதிப் பிரிவு முதன்மை ஒருங்கிணைப்பாளா் ஐ. நாகராஜன் வாழ்த்திப் பேசினாா்.

ஆன்மிகச் சொற்பொழிவாளா் சொ. சொ.மீ. சுந்தரம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ‘பிள்ளை பெருமான்’ என்ற தலைப்பில் திருச்செந்தூா் முருகனின் சிறப்புகளையும், திருச்செந்தூா் பிள்ளைத் தமிழின் சிறப்புகளையும் விளக்கிப் பேசினாா்.

Advertisement

Advertisement

இதில் மதுரைக் கம்பன் கழக ஒருங்கிணைப்பாளா் புலவா் கீ. வேலாயுதம், கல்லூரி பேராசிரியா்கள், தமிழ்த் துறை மாணவா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக, கல்லூரியின் தமிழ்த் துறை தலைவா் சா. தனசாமி வரவேற்றாா். தமிழ்த் துறைப் பேராசிரியா் ம. கண்ணன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments