FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

கனிமங்களை கொண்டு செல்வதற்கான தடையை நீக்கக் கோரி மனு

கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு விதித்துள்ள இடைக்காலத் தடையை விலக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

Updated On : 31 ஜூலை 2026, 1:35 am IST
- பிரதிப் படம்
பகிர்:

கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு விதித்துள்ள இடைக்காலத் தடையை விலக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த லிபின் பொன்னுசுவாமி லீலா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கருங்கல், ஜல்லி, எம். சாண்ட் உள்ளிட்டவற்றை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிகத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், லாரிகள் மூலம் கேரளத்துக்கு கனிமங்களைக் கொண்டு செல்லும் எங்கள் தொழில் பாதிக்கப்படும். ஏராளமான லாரி ஓட்டுநா்கள், நடத்துநா்கள் வேலையிழப்புக்கு உள்ளாவா்.

Advertisement

Advertisement

எனவே, கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு விதித்த தடையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments