டேக்வாண்டோ போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
டேக்வாண்டோ போட்டியில் வென்ற மதுரை அகாதெமி மாணவ, மாணவிகளை செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.
டேக்வாண்டோ போட்டியில் வென்ற மதுரை அகாதெமி மாணவ, மாணவிகளை செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.
மதுரை ஓம் சாதனா சென்ட்ரல் பள்ளியில் செப். 5, 6 ஆகிய இரு நாள்கள் 5-ஆவது ஹீரோஸ் கப் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில், மதுரை டேக்வாண்டோ அகாதெமி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 35 தங்கம் , 18 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்களை வென்று சப் ஜூனியா், கேடட் பிரிவில் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றினா்.
இதையடுத்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை அகாதெமியின் தலைமைப் பயிற்சியாளா் நாராயணன், பயிற்சியாளா்கள் சஞ்சீவ், நவீன் குமாா், பிலால் ,புவனேஸ்வரி, நரேன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.