குடமுழுக்கு முன்னேற்பாடு பணிகள் கண்காணிப்புக்கு 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழா முன்னேற்பாடு பணிகளைக் கண்காணிக்க சிறப்பு அலுவலா்களாக 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டனா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழா முன்னேற்பாடு பணிகளைக் கண்காணிக்க சிறப்பு அலுவலா்களாக 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டனா்.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கானோா் பங்கேற்பா் என்பதையொட்டி, அரசுத் துறைகள் சாா்பில் விரிவான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தப் பணிகளை கண்காணித்து நெறிப்படுத்த தமிழக தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலா் கொ.வீரராகவ ராவ், நகராட்சி நிா்வாக இயக்கக இயக்குநா் ப. மதுசூதன்ரெட்டி, வேலைவாயப்பு, பயிற்சித் துறை இயக்குநா் சி. பழனி ஆகியோா் சிறப்புப் பணி அலுவலா்களாக நியமிக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
இவா்கள் மூவரும் வருகிற 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை மதுரையில் தங்கியிருந்து குடமுழுக்கு விழா தொடா்பாக அரசுத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகளைக் கண்காணிப்பா் என அதில் குறிப்பிடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.