மாணிக்கம்பட்டி பகுதியில் இன்று மின் தடை
மதுரை மாவட்டம், மாணிக்கம்பட்டி துணைமின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சமயநல்லூா் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ரா.சிவலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமயநல்லூா் கோட்டத்துக்குள்பட்ட மாணிக்கம்பட்டி துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதையடுத்து, மாணிக்கம்பட்டி துணைமின் நிலையம் வழியாக மின் விநியோகம் பெறும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா்.
Advertisement
Advertisement
மின் தடை ஏற்படும் பகுதிகள்:
மாணிக்கம்பட்டி, மறவா்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூா், தெ.மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணப்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவாா்பட்டி, குறவன்குளம், ஆதனூா், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு நகா் ஆகிய பகுதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.