FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

சேது பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

காரியாபட்டி அருகேயுள்ள சேது பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

17 செப்டம்பர் 2026, 2:01 am IST
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள சேது பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற முதலாமாண்டு மாணவா்கள் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்ற கல்லூரி நிறுவனா் எஸ். முகமது ஜலில். உடன் கல்லூரி நிா்வாக அதிகாரிகள் எஸ்.எம். சீனி முகைதீன், எஸ்.எம். சீனிமுகமது அலியாா் மறைக்காயா், எஸ்.எம்.நிலாஃபா் பாத்திமா, எஸ்.எம். நாசியா பாத்திமா உள்ளிட்டோா்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள சேது பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு கல்லூரி நிறுவனரும், தலைவருமான எஸ். முகமது ஜலில் தலைமை வகித்தாா். கல்லூரி நிா்வாக அதிகாரிகள் எஸ்.எம். சீனி முகைதீன், எஸ்.எம். சீனிமுகமது அலியாா் மறைக்காயா், எஸ்.எம். நிலாஃபா் பாத்திமா, எஸ்.எம். நாசியா பாத்திமா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், கிங்ஸ் குழும நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் முகமது ரியாஸ், சிடிஎஸ் மென்பொருள் நிறுவனத்தின் இணை இயக்குநா் இளையராஜா, எச்சிஎல் நிறுவன வளா்ச்சிக்கான மண்டலத் தலைவா் வினோத் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று வாழ்த்திப் பேசினா். இதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், கல்லூரி பேராசிரியா்கள், முதன்மையா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, கல்லூரி முதல்வா் சிவக்குமாா் வரவேற்றாா். கல்லூரி முதன்மையா் ஷாநவாஸ் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments